குறுந்தொகை: பாடல் 160
குறுந்தொகை 160 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ தோழி! நம் காதலர் வரவே?
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, ''வரைவர்'' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது.
மதுரை மருதன் இளநாகன்
நெருப்பு - அன்றிற் சேவல்'தலை' (ஆகுபெயர்)
இறவு - இறா மீன்
நெருப்பின்,இறவின் - 'இன்' - சாரியை
கொடு வாய் - வளைந்த அலகு
தடவு - தடா மரம்
தடா - தடவு (தடா - தட - தடவு)
நரலும் - ஒலிக்கும்
நள்- ஒலிக்குறிப்புச் சொல்
நன்றி : http://tamil concordance.in
