குறுந்தொகை: பாடல் 2
குறுந்தொகை இரண்டாம் பாடலின் விளக்கம் மற்றும் சங்க இலக்கியப் பார்வை.
KURUNTHOHAI

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
இறையனார்
Free Copyright Videos by
CESAR AUGUSTO RAMIREZ VALLEJO, Daniel Hourtoulle and Andreas from Pixabay
