குறுந்தொகை: பாடல் 13

குறுந்தொகை 13ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/13/20251 min read

குறிஞ்சி

மாசு அறக் கழீஇய யானை போலப்

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்

நோய் தந்தனனே - தோழி!-

பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.

தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.

கபிலர்

மாசு - அழுக்கு

கெழீஇய - கழுவுதல்

பெயல் - மழை

இரும்பிணர் - கரிய சருச்சரை சொரசொரப்பான

துறுகல் - சிறிய கல்பாறை

பைதல் - குளிர்ச்சி

ஒருதலை - ஒருபக்கம்

சேக்கும் - தங்கும்

நன்றி

(http:// http://tamil concordance.in)