குறுந்தொகை: பாடல் 14
குறுந்தொகை 14ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
''நல்லோள் கணவன் இவன்'' எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
''மடன்மா கூறும் இடனுமார் உண்டே'' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். ''மடலேறுவல்'' என்பதுபடச் சொல்லியது.
தொல்கபிலர்
பொருள்
பொதி - நிறைதல்
செந்நா - சிவந்த நா
வார்தல் - நேராகுதல்
வை - கூர்மை
இலங்கு -விளங்கு
எயிறு -பல்
சில் மொழி -சில சொற்கள்
அரிவை -இளம்பெண்
