குறுந்தொகை: பாடல் 15

குறுந்தொகை 15ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/15/20251 min read

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு

தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய

நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,

வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்

சேயிலை வெள் வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது.

ஔவையார்

பறை -மணப்பறை

பணிலம் -சங்கு

ஆர்த்தல்- ஒலித்தல்

இறை - தங்குதல்(மணவினை நிகழ்த்தும் பொருட்டு)

தொல் -பழைய

மூது/முது -மூத்த/வயதான

பொதியில் -பொதுஇடம்/மன்றம்

சேயிலை -சிவந்த இலை

வாய் -வாய்மை

ஆய்- அழகு

கழல் ஆடவர் காலில் அணியும் அணிகலன்

வாய் -வாய்மை

விடலை- பாலை நிலத் தலைவன்