குறுந்தொகை: பாடல் 17
குறுந்தொகை 17ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது.
பேரெயின்முறுவலார்
மா -குதிரை
மடல் -பனை மட்டை
குவிதல்- கூம்புதல்
முகிழ் -அரும்பு
கண்ணி -தலையில் சூடும் மாலை
மறுகு -தெரு
காழ் -வயிரம்
ஆர்த்தல்-ஆரவாரித்தல்
காமம் காழ்கொள்ளுதல்- காமம் முதிர்தல்
குவிதல் - கூம்புதல்
சங்க அக இலக்கியத்தில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்பு உடைய பாடல்கள்:
குறுந்தொகை: 14,17,32,173,182.
நற்றிணை: 146,152,220,342,377.
கலித்தொகை: 58,61,138,139,140,141.
