குறுந்தொகை: பாடல் 18
குறுந்தொகை 18ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.
கபிலர்
வேரல் -சிறு மூங்கில்
வேர் -மூலம்/பலாமரத்தின் அடிப்பகுதி
கோள்- குலை
சாரல் -மலைப்பக்கம்
செவ்வி -சரியான நேரம்
மதி -அசைச்சொல்
கோடு -கொம்பு
தூங்கல் -தாழ்தல்/தணிந்து கிடத்தல்
தவ -உரிச்சொல்
