குறுந்தொகை: பாடல் 19
குறுந்தொகை 19ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது
பரணர்
எவ்வி -மிழலைக் கூற்றத்துத் தலைவன்
புல் என்றல்- பொலிவு இழத்தல்
இனை -வருந்துதல்
மதி -முன்னிலை அசை
எல் -ஒளி
மௌவல் - முல்லை/மரமல்லி
மனைமரம் - மனைக்கு அருகில் உள்ள மரம்,முல்லைக்கொடி படர்ந்த மரம்/மரமல்லி மரம்
நாறுதல்- மணத்தல்
பல் -பல
எவ்வி பற்றிய குறிப்புகள் ஒன்பது இடங்களில் உள்ளன.
அவை:
அகநானூறு
115:8,126:13,266:11,366:12
குறுந்தொகை
19:1
புறநானூறு
24:18, 202:14,233:5,6
நன்றி
http:// tamil concordance.in
