குறுந்தொகை: பாடல் 25
குறுந்தொகை 25ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யாரும் இல்லை; தானே; கள்வன்
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத் தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே..
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கபிலர்
பொய்த்தல் -தலைவன் தன் மொழியில் தப்பி நடத்தல்
மணத்தல் -கலத்தல்/ இயற்கைப்புணர்ச்சி
ஞான்று -பொழுது/காலம்
