குறுந்தொகை: பாடல் 27

குறுந்தொகை 27ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/27/20251 min read

பாலை

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

வெள்ளிவீதியார்

உக்காஅங்கு - சிந்தியது போல

பசலை - காமநோய் கொண்ட மகளிர் மேனியில் உண்டாகும் நிற வேறுபாடு

உணீஇயர் - வினையெச்சம்

திதலை - தேமல்

மாமை - மாந்தளிர் நிறம்

கவின் - அழகு