குறுந்தொகை: பாடல் 28

குறுந்தொகை 28ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்

ஓரேன் யானும் ஒர் பெற்றி மேல் இட்டு

ஆஅ, ஒல் எனக் கூவுவேன்கொல்

அலமரல் அசைவளி அசைப்ப என்

உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஔவையார்

ஓரேன் -என்ன செய்வது என்று அறியேன்

ஆஅ -இரக்கக்குறிப்பு

ஒல்- ஒலிக்குறிப்பு

கூவுதல் -உரக்கக் கூப்பிடுதல்

அலமரல் -சுழற்சி

அலைப்ப - வருத்த

அசைவளி -வாடைக்காற்று

உயவு நோய் -வருத்தும் நோய்

துஞ்சும் -தூங்கும்