குறுந்தொகை: பாடல் 36
குறுந்தொகை 36ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
''வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்'' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது.
பரணர்
துறுகல் -பொற்றைக்கல்
மாணை -ஒரு காட்டுக்கொடி
மாக்கொடி -பெரிய கொடி
களன் -இடம்
நீயலென் -பிரியேன்
மற்று -அசை
தாவா -நல்ல
வஞ்சினம் -சூளுரை/உறுதிமொழி
