குறுந்தொகை: பாடல் 41
குறுந்தொகை 41 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
அணிலாடு முன்றிலார்
உழையர் -உடன் உறைபவர்
சாறு -விழா
புகல்வேன் -மகிழ்வேன்
மன்ற -உறுதியாக
அத்தம் -கடினமான பாதை/அரிய வழி
நண்ணிய -இருக்கின்ற
புலப்பில் -புலப்பு+இல், தனிமையில் உள்ள வீடு
அலப்பென்- வருந்துவேன்
அணில் (4முறை)
குறுந்தொகை 41:4,49:1
புறநானூறு 246:4,307:4
வரிப்புற அணிலொடு பெரும்பாண் ஆற்றுப்படை 85
http:// tamil concordance.in
