குறுந்தொகை: பாடல் 42

குறுந்தொகை 42 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! எம்

தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது

கபிலர்

காமம்- மெய்யுறு புணர்ச்சி

கருவி -தொகுதி

விடரகம்- முழைஞ்சு

விடர் -நிலப்பிளப்பு, மலைப்பிளப்பு,மலைக்குகை,மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை

இயம்புதல் - ஒலித்தல்