குறுந்தொகை: பாடல் 43
குறுந்தொகை 43 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''செல்வார் அல்லர்'' என்று யான் இகழ்ந்தனனே;
''ஒல்வாள் அல்லள்'' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது.
ஒளவையார்
ஒல்வாள் அல்லள்- உடன்படமாட்டாள்
இருபேர் -இரண்டு பேர்/இருவர்
ஆண்மை- ஆளுந்தன்மை
பூசல்- பிரிவுத்துன்பம்
நல் அரா- நல்ல பாம்பு
கதுவுதல்- கவ்வுதல்/கடித்தல்
அலமலக்குறுமே- சுழலும்/அலைமோதும்
