குறுந்தொகை: பாடல் 45

குறுந்தொகை 45 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,

வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற

மல்லல் ஊரன், ''எல்லினன் பெரிது'' என,

மறுவரும் சிறுவன் தாயே;

தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.

தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது

ஆலங்குடி வங்கனார்

பண்ணி -ஒப்பனை செய்து

தழீஇய- தழுவல் பொருட்டு

மல்லல் -மிகுதி/செல்வம்

மல்லல் ஊரன் மருத நிலத் தலைவன் (மல்லல் வளனே தொல்.உரியியல்)

எல்லினன் - வழக்கம் உடையவன்

மறுவருதல்- கலங்குதல்/மயங்குதல்/சுழலுதல்

தெறுவது- துன்பம் தருவது

ஆலங்குடி வங்கனார்

குறுந்தொகை 8,45

நற்றிணை 230,330,400

அகநானூறு 106

புறநானூறு 319

http://tamil concordance.in