குறுந்தொகை: பாடல் 49
குறுந்தொகை 49 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது
அம்மூவனார்
கொங்கு -பூந்தாது
முண்டகம்- கழிமுள்ளிச்செடி
மணி- நீலமணி
கேழ் -நிறம் /கருமை
கணவனை- கணவன்+ஐ(சாரியை)
நேர்பவள் -ஒத்தவள்
