குறுந்தொகை: பாடல் 50

குறுந்தொகை 50 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்

செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்

துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து

இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்

புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.

குன்றியனார்

ஐயவி -வெண் சிறுகடுகு

சிறு வீ -சிறிய பூ

செவ்வி -அழகிய/எழில் மிக்க

மருது - மருத மரம்

செம்மல்-வாடற்பூ

தாஅய்-பரந்து/பரவி

துறை- நீராடும் துறை

அணிந்தன்று-அழகு செய்தது

இறை-முன்கை

நெகிழ-தளர/தளர்கை/கழல

சாஅய்-மெலிந்து

புலம்பு -தனிமை