குறுந்தொகை: பாடல் 56
குறுந்தொகை 56 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது.
சிறைக்குடி ஆந்தையார்
கிளைத்தல் - தோண்டுதல்
மிச்சில் - உண்டு எஞ்சியது
குளவி - காட்டுமல்லிகை
(இங்கு சருகுக்கு ஆகுபெயர்)
மொய்த்தல் - சருகு உதிர்ந்து மூடுதல்
சின்னீர் - சிறிய அளவு நீர்
வருகதில் - தில் - விழைவுப்பொருள்+ஒழியிசைப்பொருள்
அம்ம - கேள்( தலைவன் நெஞ்சு)
நன்றி
