குறுந்தொகை: பாடல் 58
குறுந்தொகை 58 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!
கழற்றெதிர்மறை
வெள்ளிவீதியார்
இடிக்கும் கேளிர் -குற்றம் கண்ட தலைவனை இடித்துக் கூறி,திருத்த முயலும் பாங்கன்
கேளிர்! நும் - பன்மைச் சொற்கள்(பாங்கனை மட்டும் குறிக்கும்)
குறை -நுமது செயல்
அறை- பாறை
மன்தில்ல -விழைவு/விருப்பம்
உணங்கு -உலர்/உலர வைத்தல்
உணங்கல் -உலர்தல் /உலர்ந்த பொருள்(வெண்ணெய்)
வெண்ணெய் (5முறை)
வெண்ணெய்க்கும் (1முறை)
வெண்ணெயின் (1முறை)
நன்றி
