குறுந்தொகை: பாடல் 59
குறுந்தொகை 59 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
மோசிகீரனார்
பதலை - ஒருகட் கிணைப் பறை
பாணி- தாளம்
பரிசிலர் - பாணர் முதலியோர்
கோமான் - இரவலரைப் புரக்கும் தலைவன் / வேந்தன்
அதலைக் குன்றம் - ஒரு மலை
குண்டு சுனை - ஆழ்ந்த சுனை
பொதிந்த - கட்டப்பட்ட
குளவி - காட்டு மல்லிகை/மலைப்பச்சை
மறப்பரோ - மறவார் (ஓகாரம் எதிர்மறை)
மற்றே - மற்று +ஏ (அசை)
விலங்கிய - குறுக்கிட்ட
அரும் பொருள் - தேடுதற்கு அரிய பொருள்
நீடல் - காலம் தாழ்த்து இருத்தல்
நன்றி
