குறுந்தொகை: பாடல் 61

குறுந்தொகை 61 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

தச்சன் செய்த சிறு மா வையம்,

ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்

ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,

உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.

தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.

தும்பிசேர்கீரன்

சிறு மா வையம் - தச்சன் செய்த குதிரை வண்டி

வையம் - ஊர்தி

ஈர்த்து - இழுத்து

உற்று இன்புறுதல் - மெய்யுறு புணர்ச்சியால் இன்புறுதல்

பொய்கை ஊரன் - மருத நிலத் தலைவன்

புலவர் தும்பிசேர் கீரனார்

------------------------------------------------

தும்பியைப் பற்றிப் பாடியவர்:எனவே பெயருக்கு முன் தும்பியை இணைத்து , பிற புலவரிடமிருந்து வேறுபடுத்தினர்.

மணிச் சிறைத் தும்பி(குறுந்.392: 1)

கொடியை வாழி தும்பி (நற்றிணை 277:1)

நன்றி

http:// tamil concordance.