குறுந்தொகை: பாடல் 62

குறுந்தொகை 62 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,

நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,

ஐது தொடை மாண்ட கோதை போல,

நறிய நல்லோள் மேனி

முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.

தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது

சிறைக்குடி ஆந்தையார்

கோடல் - காந்தள் மலர்

எதிர்முகைப் பசு வீ

முல்லை - அரும்பி மலராத நிலையிலுள்ள பசிய பூவும் முல்லையும்

நாறிதழ்க் குவளை - மணங்கமழும் மலர்

ஐது - அழகிது

தொடை - தொடுத்தல்

மாண்ட - மாட்சிமைப்பட்ட

கோதை - மாலை

நறிய - மேனி (தலைவி)

மேனி – உடம்பு (ஆகுபெயர்)

முறி - மாந்தளிர்

முயங்குதல் - தழுவுதல்

http://tamil concordance.in