குறுந்தொகை: பாடல் 63
குறுந்தொகை 63 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்'' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது
உகாய்க்குடி கிழார்
ஈதல் - வறியோர் இன்மை தீரக் கொடுத்தல்
துய்த்தல் - ஐம்பொறியானும் புலன்களை ஆர நுகர்தல்
செய்வினை - பொருள் செய்வதற்குரிய தொழில்
கைம்மிக எண்ணுதல் - மேலும் கருதுதல்
