குறுந்தொகை: பாடல் 68
குறுந்தொகை 68 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது.
அள்ளூர் நன்முல்லையார்
பூழ் - குறும்பூழ்:காடை/சிறு பறவை
ஊழ்ப்படுதல்- மலர்தல் (மலர்தலினின்றும் தோன்றிய முதுகாய்)
முதுகாய் - நெற்று
உழையினம் - மான் கூட்டம்
கவர்தல்- இரையாகக் கோடல்
அற்சிரம் - முன் பனிக்காலம்
