குறுந்தொகை: பாடல் 69
குறுந்தொகை 69 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!
தோழி இரவுக்குறி மறுத்தது
கடுந்தோட் கரவீரன்
தாக்கலை- தா+கலை/தாவுகின்ற ஆண்குரங்கு
பெரும்பிறிது- இறப்பு
கைம்மை- கணவனை இழந்த நிலை
உய்யா -தாங்க இயலாத/ஏற்க இயலாத
காமர் மந்தி- துணையிடம் பெரிதும் விருப்பம் உடைய மந்தி
நடுநாள் -நடு இரவு
--------------------------------------------
பெரும் பிறிது (8 இடம்/முறை)
---------------------------------------------
குறுந்தொகை 68:1,372:2-3
நற்றிணை 219:1-4,381:1-2
அகநானூறு 55:1-4,253:2
புறநானூறு 152:2,368:8
குறுந்தொகை: குறிஞ்சி,பாலை
நற்றிணை:
பாலை,நெய்தல்
அகநானூறு:
பாலை
புறநானூறு:
பாடாண் திணை,பரிசில் துறை
வாகை, மறக்களவழி
நன்றி
