குறுந்தொகை: பாடல் 70

குறுந்தொகை 70 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்

நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;

இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்;

சில மெல்லியவே கிளவி;

அனை மெல்லியல் யான் முயங்குங்காலே.

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

ஓரம்போகியார்

ஒடுங்கு ஈரோதி - இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலை உடையவள்

ஈரோதி, ஒண்ணுதல் - அன்மொழித்தொகை

இனையள் - இத்தன்மையள்

புனையளவு - சொல்லால் புனைந்து கூறும் எல்லை