குறுந்தொகை: பாடல் 71

குறுந்தொகை 71 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இளமுலை,

பெருந்தோள், நுணுகிய நுசுப்பின்,

கல்கெழு கானவர் நல்குறு மகளே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

கருவூர் ஓதஞானி

வைப்பு - செல்வத்திரட்சி

சுணங்கு - தேமல்

நுசுப்பு - இடை

நல்குதல் - கைமாறு கருதாது வழங்குதல்