குறுந்தொகை: பாடல் 72
குறுந்தொகை 72 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது
மள்ளனார்
அலமருதல் - சுழலுதல்
ஏ - அம்பு
மாமலை - பெரிய மலை
பரீஇ - பருவி /பருத்தி
ஏனல் - தினை
குரீஇ - குருவி
மழைக்கண் - கண்ணுக்குப் பண்பு உவமை
