குறுந்தொகை: பாடல் 73

குறுந்தொகை 73 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;

அழியல் வாழி தோழி! நன்னன்

நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய

ஒன்றுமொழிக் கோசர் போல,

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது

பரணர்

மகிழ்நன் - தலைவன்

வெய்யை - விருப்பம் உடையாய்

வன்கண் - தறுகண்/ கருணையற்ற செயல்

வேண்டுமால் - வேண்டும்+ஆல் - அசை

--------------------------

நன்றி http://tamil concordance.co.in