குறுந்தொகை: பாடல் 75

குறுந்தொகை 75 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-

ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!

வெண் கோட்டு யானை சோணை படியும்

பொன் மலி பாடலி பெறீஇயர்!

யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?

தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது

படுமரத்து மோசிகீரனார்

ஒன்று - உண்மை

நசையினம்( தன்மைப் பன்மை )- விருப்பம் உடையோம்

மொழிமோ- -மோ முன்னிலை அசை

பெறீஇயர் - வியங்கோள் வினைமுற்று

நம்மைப் பிரிந்து சென்ற தலைவன் தேடும் செல்வம்/பொருள் இமயமலை அளவு இருக்குமோ ?

நந்தர் பாடலிபுரத்தில் கங்கை ஆற்றில் புதைத்து வைத்த செல்வத்தின் அளவு இருக்குமோ ?

-மாமூலனார்

(அகநானூறு 265 : 1-6)

--------------------------

http://tamil concordance.co.in