குறுந்தொகை: பாடல் 81

குறுந்தொகை 81 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,

பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்

புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;

உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்

நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்

கடலும் கானலும் தோன்றும்

மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.

தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

பசு பனை - பசிய அரும்பு/புதிய அரும்பு

ஞாழல் - கொன்றை

ஒரு சிறை - ஒருபக்கம்

உதுக்காண் - சுட்டு

மா ,தெய்ய - அசை

கானல் - கடற்கரை,கழி ,உவர் நிலம், கடற்கரைச் சோலை