குறுந்தொகை: பாடல் 84
குறுந்தொகை 84 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
மோசிகீரன்
துனி - பிணக்கு,ஊடல் (பெயர்)
கழல்தொடி - உழலும் படி இட்ட தோளணி
ஆய் - கடையேழு வள்ளல்களில் ஒருவன்
பொதியில் - தமிழ்நாட்டில் தென்திசையில் உள்ள ஒரு மலை
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்
இனி அறிந்தேவ்ல்ன் அது துனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே
புதிய துறை
*****
பொருள்வயின் பிரியக் கருதிய தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது.
