குறுந்தொகை: பாடல் 87
குறுந்தொகை 87 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்'' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது.
கபிலர்
மன்றம் - ஊர்ப்பொதுவிடம்/அம்பலம்
மராஅம் - செங்கடம்பு (இசைநிறை அளபெடை)
பேஎம் - அச்சம் (இன்னிசை அளபெடை)
தெறூஉம் - தண்டிக்கும் என்று (இன்னிசை அளபெடை)
பசைஇ - விழைதல் பொருட்டு (சொல்லிசை அளபெடை)
பசந்தன்று - பசந்தது
ஞெகிழ - நெகிழ்தல் பொருட்டு
ஞெகிழ்ந்தன்று - நெகிழ்ந்தது
