குறுந்தொகை: பாடல் 88
குறுந்தொகை 88 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே தோழி! நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது.
மதுரைக் கதக்கண்ணன்
ஒலி வெள்ளருவி - முழங்கும் அருவி
வயப்புலி - வலிமைமிக்க புலி
தொல் முரண்- பழைய வலிமை
துன்னுதல் - அணுகுதல்/அடைதல்
துன் அரும் சாரல் - நெருங்குவதற்கு அரிய சாரல்
வடு - பழி /தழும்பு
அருவி (162 முறை+37 பின் ஒட்டுக்களுடன்)
-------------
