குறுந்தொகை: பாடல் 96
குறுந்தொகை 96 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?'' என்றி; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என் ஆகுவைகொல்? நன்னுதல்! நீயே
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது
அள்ளூர் நன்முல்லை
என்றி -என்கின்றாய்
அது -அங்ஙனம் கூறியது
நகை -நகைச்சொல்
நன்னுதல்- அன்மொழித்தொகை (தோழி)
………………………………………………………………..
யான் எவன் செய்கோ ?
----------------------------------------------
குறுந்தொகை 25:2 , 96:6
ஐங்குறுநூறு 133:1, 154:4,
அகநானூறு 50:14.
நன்றி: tamil concordance://co.in
