குறுந்தொகை: பாடல் 97
குறுந்தொகை 97 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
வெண்பூதி
ஈண்டையேன்- இவ்விடத்தேன்
ஆனா நோய்- பிரிந்து அமையாத துன்பம்
துறைவன்- நெய்தல் தலைவன்
மறை -களவு மணம்
அலர் - பலர் அறிந்து கூறும் பழிச்சொல்மன்றம் - ஊர்ப்பொது இடம்
