குறுந்தொகை: பாடல் 100
குறுந்தொகை 100 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது
அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
கபிலர்
பருவிலை - பெரிய இலை
குளவி - மலை மல்லிகை
மரல் - ஒரு வகைக் கற்றாழை(செடி)
கட்கும் - களை பறிக்கும்
காந்தள்வேலி- பண்புத்தொகை
சிறுகுடி- மலையக மக்கள் ஊர்
கோடு - மருப்பு
நொடுத்து - விற்று
வல் வில் ஓரி - வில் தொழிலில் வன்மை உடைய ஓரி
http://tamil concordance .co.in
