குறுந்தொகை: பாடல் 101

குறுந்தொகை 101 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,

அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,

இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-

பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,

மாண் வரி அல்குல், குறுமகள்

தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம்

பரூஉ மோவாய்ப் பதுமன்

தூக்குதல் - நிறைகாண்டல்

தோள்மாறுபடும் வைகல் - தழுவுதல்

வைகல் - வைகுதல், தங்குதல், புணர்தல்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்/

ஒண்தொடி கண்ணே உள.(குறள் 1101)