குறுந்தொகை: பாடல் 103
குறுந்தொகை 103 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவிச் செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல் தோழி! யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வாயிலான் தேவன்
கடும் புனல் - கடிதாக ஓடும் நீர்
அஞர் - வருத்தம்
அள்ளல் - சேறு
கவிர் - முள்முருங்கை
தூவி - இறகு
எவ்வம் - துயரம்
தூஉம் - தூவு கின்ற
துயர் கூர் வாடை - துன்பம் மிகக் காரணமான வாடை
