குறுந்தொகை: பாடல் 104
குறுந்தொகை 104 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வாழி, தோழி! காதலர்,அம்ம.
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது;
''சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?'' என்ற
தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம்.
காவன்முல்லைப் பூதனார்
அம்ம - கேட்பிக்கும் சொல்
வாழி - வாழ்வாயாக
நூல் - முத்து மாலையில் உள்ள கோர்க்கும் நூல்
சிதர் - துளி
உறைத்தல் - துளிர்த்தல்
தாளி - அறுகம்புல்
பவர் - அடர்ந்த கொடி
நாள் - விடியற்காலம்
