குறுந்தொகை: பாடல் 108

குறுந்தொகை 108 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்

கறவை கன்றுவயின் படர, புறவில்

பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்

செவ் வான் செவ்வி கொண்டன்று;

உய்யேன் போல்வல் தோழி! யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது.

வாயிலான் தேவன்

புறவு - முல்லை நிலம்

பாசிலை - பசிய இலை

ஆசு - குற்றம்

வான் பூ - வெள்ளிய பூ

செவ் வான் - சிவந்த வானம், செக்கர் வானம்

கொண்டன்று - கொண்டது

உய்யேன் - வாழேன்

யானே -ஏகாரம் பிரிநிலை