குறுந்தொகை: பாடல் 112
குறுந்தொகை 112 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
ஆலத்தூர் கிழார்
கௌவை - அலர்
எய்த்தல் - இளைத்தல்
எள்ளற - எள்+அற ,பழிச் சொல் அறும் பொருட்டு
நார் - பட்டை
ஒசியல் - ஒடிந்த கிளை
கண்டிசின் - காண்பாயாக
ஊரவர் கெளவை எருஆக அன்னைசொல்
நீர்ஆக நீளும்இந் நோய். (குறள். 1147)
