குறுந்தொகை: பாடல் 113
குறுந்தொகை 113 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.
மாதீர்த்தன்
துன்னுதல் - நெருங்குதல்
யாம் - உளப்பாட்டுப் பன்மை
கூழை - கூந்தல்
எருமண் - வண்டற் பொருக்கு மண், காய்ந்த சேற்று ஏடு (வலை தமிழ்)
சேறும் - செல்வோம், செல்வேம்
