குறுந்தொகை: பாடல் 114

குறுந்தொகை 114 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,

நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!

செல்கம்; செல வியங்கொண்மோ அல்கலும்,

ஆரல் அருந்த வயிற்ற

நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,

இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது.

பொன்னாகன்

நெய்தற் பரப்பு - நெய்தற் பூப்படுக்கை

செல் - போகும்படி

வியங்கொள்ளுதல் - விடுத்தல்

அல்கல் - இரவு

என் மகள் - தலைவியின் பொம்மை