குறுந்தொகை: பாடல் 116

குறுந்தொகை 116 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,

வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை

நுண் மணல் அறல் வார்ந்தன்ன,

நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

இளங்கீரன்

தேம் பாய் கூந்தல் - நறுமணம் மிக்க கூந்தல்

உறந்தை - உறையூர்

பெருந் துறை- காவிரித் துறை

அறல் - நீரோடிய வழி மணலில் உண்டாகும் வரிகள்

நன்னெறிய(வ்)வே - அடர்ந்த,நெறிப்புடைய கூந்தல்

நன்றி- http://tamil concordance.in