குறுந்தொகை: பாடல் 120

குறுந்தொகை 120 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,

அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி

நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு

அரியள் ஆகுதல் அறியாதோயே.

அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்.

பரணர்

இல்லோன் - கைப் பொருள் இல்லோன்/ ஏழை

அரிது - தலைவியை நுகரும் இன்பம்