குறுந்தொகை: பாடல் 122
குறுந்தொகை 122 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது.
ஓரம்போகியர்
புன்புறம் - சிறிய முதுகு
குண்டு - பருத்த/ உருண்ட
ஆம்பல் - அல்லி
இனி - இப்பொழுது
வந்தன்று - வந்தது
கங்குல் - இரவு
