குறுந்தொகை: பாடல் 123

குறுந்தொகை 123 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,

நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,

கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,

இன்னும் வாரார்; வரூஉம்,

பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே,

பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது.

ஐயூர் முடவன்

புலம்ப - தனித்திருப்ப

என்னையர் - என் தமையன்மார்

திமில் - படகு