குறுந்தொகை: பாடல் 126
குறுந்தொகை 126 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
''இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி! நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
ஒக்கூர் மாசாத்தி
இவணர்(இவர் + அர்) - இவ்விடத்தர்
எவணர்(எவண் + அர்) - எவ்விடத்தர்
